Benifits of Lighting Oil Lamps (Deepam) Do's and Don'ts !!!!!! (Tamil) - Mani Eric Blog

Benifits of Lighting Oil Lamps (Deepam) Do's and Don'ts !!!!!! (Tamil)






தீபங்கள் ஏற்ற வேண்டிய திசைகளும் கிடைக்கும் அருட்கடாட்சங்களும்

நாம் அன்றாடம் காலையும்மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம்தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர்வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா? சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும்மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால் தானே தீபம் எரியும் ,எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?

நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்ததுஅவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம்எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றதுமனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்

நெய்:தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும்இல்லறத்திற்கும் நலனை தருகிறது.

நல்லெண்ணெய்:நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்

விளக்கெண்ணெய்:தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.

திரியின் வகையில் பஞ்சுஇலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது
தாமரைத் தண்டு:தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும். [வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு
துணி:புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காயவைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.

திசைகளும் பலனும்
கிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.
மேற்கு:மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்நீங்கும்.
வடக்கு:வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்செல்வம் உண்டாகும்.இது குல தெய்வத்திற்கு உகந்தது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.

இறைவனுக்கு உகந்த எண்ணெய்:
மஹாலட்சுமி : நெய்

நாராயணன் : நல்லெண்ணெய்

எண்ணெய்க் குளிப்பு!

எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் 

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும் 
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்

மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு

ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதுஆண்களுக்குதிங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். [ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]

இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் – அல்லது நினைக்கும் இணைய அன்பர்கள் தனக்கு தேவையான – தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்நம் முன்னோர்கள் சனியையும்புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்மற்ற செல்வங்களை விடஅறிவினையும்உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் – மதித்தார்கள்எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.

Benifits of Lighting Oil Lamps (Deepam) Do's and Don'ts !!!!!! (Tamil) Benifits of Lighting Oil Lamps (Deepam) Do's and Don'ts !!!!!! (Tamil) Reviewed by Mani Eric Blog on December 27, 2017 Rating: 5

No comments:

Featured Post

Admiration of Shri Brihadeeswara Temple, Thanjavur !!!! (TAMIL)

கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன்   ராஜராஜ சோழன் . ஆயிரம் வயது ஆகியும...

Facebook

Seo Services
Theme images by Roofoo. Powered by Blogger.